ஆதித்தனார் கல்லூரியில்வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்

ஆதித்தனார் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
ஆதித்தனார் கல்லூரியில்வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளம் வாக்காளர் மன்றம், உள்தர மதிப்பீட்டு குழு, திருச்செந்தூர் தேர்தல் பணிக்குழு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுவர் இதழ் போட்டி என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் கடந்த 3 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இளம் வாக்காளர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வரவேற்று பேசினார்.

இதில் கட்டுரை போட்டியில் மனோஜ், சினேகா, சாமுவேல், ராமவசந்தம் ஆகியோரும், பேச்சு போட்டியில் சித்ரா, சதீஷ், செல்வம் ஆகியோரும், ஓவியப்போட்டியில் அபர்ணா ஸ்ரீமதி, சீதாலட்சுமி, வர்ஷ ஹரிணி ஆகியோரும் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேர்தல் பணிக்குழு தாசில்தார் பரிசு வழங்க உள்ளார். போட்டி நடுவர்களாக பேராசிரியர்கள் சிங்காரவேலு, பென்னட், திருச்செல்வன், சிரில் அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, பார்வதிதேவி, ராஜபூபதி, சுகாசினி, ஜெயசுதா, மகேஸ்வரி, உள்தர மதிப்பீட்டு குழு இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் செயல்பட்டனர். இளம் வாக்காளர் மன்ற துணை இயக்குனர் அன்டனி பிரைட் ராஜா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com