அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி

சீர்காழியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஈசானிய தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவை தலைவர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். பின்னர் கட்சி கொடியை மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரமோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com