அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
Published on

அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட துணை செயலாளர் ராமஜெயலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக அரசை கண்டித்து வருகிற 29-ந் தேதி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே காலை 10 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், செல்வராஜ், வடிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com