அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

தச்சநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
Published on

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் தச்சநல்லூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமை கழக பேச்சாளர்கள் மதுரை பாண்டியன், தீக்கனல் லட்சுமணன் உள்ளிட்டோர் பேசினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மகளிர் அணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவியுமான ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com