திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க. 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க. 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க. 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் விடியா தி.மு.க. அரசு இறங்கி உள்ளது. இந்த செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள விடியா தி.மு.க. அரசைக் கண்டித்தும். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டுரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், தொண்டர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com