அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம்

மாணிக்கப்பங்கு ஊராட்சியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது.
அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம்
Published on

பொறையாறு:

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம், பொறையாறு அருகே மாணிக்கப்பங்கு ஊராட்சியில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். செம்பனார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கண்ணன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கண்ணன் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொற்செழியன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் துரை மற்றும் மாணிக்கபங்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் மற்றும் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com