கன்னியாகுமரி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி அருகே அ.தி.மு.க.பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கன்னியாகுமரி அருக உள்ள கொட்டாரம் அச்சன்குளம் சங்கர் படிப்பக தெருவைச் சேர்ந்தவர் ஜென்சன் ராய் (வயது52). இவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்து வந்தார்.

மேலும், ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், நேவிஸ்ராஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். ஜென்சன்ராய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள படுக்கை அறையில் இருந்து ஜென்சன்ராயின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அவரது மனைவியும் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது, ஜென்சன்ராய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜென்சன்ராய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுபற்றி அவரது மனைவி செல்வராணி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஜென்சன்ராயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜென்சன்ராய் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com