வாலிபர் படுகாயம்

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் படுகாயம்
Published on

ஒரத்தநாடு:

திருவோணத்தை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்துள்ள குழந்திரான்பட்டு முருகேசன் மகன் அகிலன் (வயது26) என்பவருக்கும், தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்துள்ள வீரக்குடி பூக்கொல்லையைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பரமேஸ்வரன் (24) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பரமேஸ்வரனும், அவருடன் வந்திருந்த சிலரும் சேர்ந்து கொண்டு பரமேஸ்வரன் தனது கையில் மாட்டியிருந்த காப்பால் அகிலனை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அகிலன் கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அகிலன் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரன், வீரக்குடி பூக்கொல்லையை சேர்ந்த சிவராமன் (27), வெட்டுவாக்கோட்டை ஆகாஷ் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய காரியாவிடுதியை சர்ந்த ராகுலை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com