125 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் நேற்று 1,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
125 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று புதிதாக 22 ஆயிரத்து 757 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 510 பேரும், பெண்கள் 553 பேரும் உள்பட 1,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 125 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 497 பேர், செங்கல்பட்டில் 190 பேர், திருவள்ளூரில் 63 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

3 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 199 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையில் 5 ஆயிரத்து 174 பேர்

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 5 ஆயிரத்து 174 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 472 பேரும், செங்கல்பட்டில் 948 பேரும், திருவள்ளூரில் 273 பேரும், கோவையில் 264 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 284 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 567 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 20 ஆயிரத்து 931 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com