திண்டுக்கல்லில் ஓய்வுபெறும் நாளில் வேளாண் அதிகாரி பணியிடை நீக்கம்

திண்டுக்கல்லில் ஓய்வுபெறும் நாளில் வேளாண்மை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் ஓய்வுபெறும் நாளில் வேளாண் அதிகாரி பணியிடை நீக்கம்
Published on

திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றியவர் பாண்டித்துரை. இவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற இருந்தார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.

அப்போது அவர் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தது. இதனால் நேற்று முன்தினம் பணி ஓய்வுபெறும் நாளில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com