அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர் கருப்பசாமி பாண்டியன். 1977-ல் ஆலங்குளம் தொகுதி, 1980-ல் பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக கருப்பசாமி பாண்டியன் தேர்வானார்.

ஜெயலலிதாவோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து 2006 தேர்தலில் தி.மு.க. சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து 2015-ல் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின், 2016-ல் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் 2018-ல் மீண்டும் தி.மு.க.விற்கு வந்த கருப்பசாமி பாண்டியன், 2020-ல் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

இந்நிலையில், அண்மையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com