அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு: தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு

அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு: தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ந்தேதி இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில் அதிமுக தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கினர்.

இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com