

சென்னை,
அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில், நடப்பு நிதி ஆண்டிலே சித்த மருத்துவ மையத்தினை அமைக்க வேண்டும் என்றும், சென்னை அருகே ரயில், சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.