

சென்னை,
தெற்கு ரெயில்வே பொது மேலாளருடன் தயாநிதிமாறன் எம்.பி. சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தொகுதிக்கான ரெயில் திட்ட பணிகள், ரெயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.
யானைகவுனி - வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பால பணி 3 மாதங்களில் தொடங்கும்.
புறநகர் ரெயில் நிலையங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.