மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை

மின் பயன்பாட்டைப் பொறுத்து 15-ல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை
Published on

சென்னை,

கடந்த செப்டம்பர் 10-ந்தேதி தமிழக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களை பெருமளவில் பாதிப்பதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற தமிழக அரசு, மின் பயன்பாட்டைப் பொறுத்து 15-ல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது. இதனால் மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே மின் வாரியத்திற்கு ஏற்கனவே ரூ.145 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.196.10 கோடி இழப்பீட்டு நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com