சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தாலும், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு

தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தாலும், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு
Published on

சென்னை,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 2016, 2021 தேர்தல்களை விட அதிகமாக 83.7% வாக்குகள் பதிவானாலும், எண்ணிக்கை அடிப்படையில் இரு தேர்தல்களை விட குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.

2016-ம் ஆண்டு 39.75லட்சம் என இருந்த மொத்த வாக்காளர்களில் 24.33 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன் சதவீதம் 61.2 ஆகும்.

2021-ம் ஆண்டு 40.04லட்சம் என இருந்த மொத்த வாக்காளர்களில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன் சதவீதம் 60 ஆகும்.

2026-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு 28.30 லட்சம் என இருந்த மொத்த வாக்காளர்களில் 23.69 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன் சதவீதம் 83.7 ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com