ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில்மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில்மரக்கன்று நடும் நிகழ்ச்சி
Published on

தென்திருப்பேரை:

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் யூனியன் தலைவர் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்று நடவுப் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com