ஆற்காடு அருகே மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - டெக்னீசியன் பலி

ஆற்காடு அருகே மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
ஆற்காடு அருகே மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - டெக்னீசியன் பலி
Published on

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள அல்லாளச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி லாவண்யா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கலவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு பிரசவ பலி அதிகமானது இதனால் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்து ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸை திமிரி அடுத்த பரதராமி கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அவருடன் கலவை அருகே உள்ள மழையூர் கிராமத்தைச் சேர்ந்த டெக்னீசியன் வெங்கடேசன்(வயது 36) என்பவர் சென்றுள்ளார். அப்போது மேட்டு குடிசை அருகே சென்றபோது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்க்கு உள்ளானது.

இந்த விபத்தில் டெக்னிசியன் வெங்கடேசன், டிரைவர் பாரதிதாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட பகுதி மக்கள் அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெக்னீசியன் வெங்கடேசன் வரும் வழியிலேயே உயிரிழந்த்தாக தெரிவித்தனர்.

டிரைவர் பாரதிதாசன், கர்ப்பிணி லாவண்யா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com