சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அமித்ஷா வருகை

சென்னை விமான நிலையத்தில் இருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அமித்ஷா வந்தடைந்தார்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அமித்ஷா வருகை
Published on

சென்னை,

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா காரில் புறப்பட்டார்.

அங்கு சாலையின் இரு புறமும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் அமித்ஷாவை வரவேற்று கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, சிறிது தூரத்திற்கு நடந்தே சென்றார். சாலையில் உள்ள தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு அவர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்ற அமித்ஷா சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தடைந்தார். அங்கு தங்கி ஓய்வெடுத்த பின்னர், இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com