விழுப்புரத்தில் 80 வயதான தாய், 60 வயதான மகள் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய்-மகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் 80 வயதான தாய், 60 வயதான மகள் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை
Published on

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான சரோஜா மற்றும் 60 வயதான அவரது மகள் பூங்காவனம் அவர்களது வீட்டில் நேற்றிரவு வழக்கம் போல் தூங்கி கொண்டிருந்த நிலையில், இன்று காலை ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தனர்.

அதேபோல், குள்ளஞ்சாவடியில், சாலையோரம் படுத்திருந்த அஞ்சம்மாள் மற்றும் நாகலிங்கம் ஆகியோர் மீதும் நேற்றிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகை, பணத்திற்காக கொலை மற்றும் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com