ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் அடுக்கு மாடி குடிருப்பு பகுதியில் வசிப்பவர் சகாயராஜ் (வயது 61). இவர் சுங்குவார் சத்திரம் அடுத்த பிள்ளைசாத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திருப்பினார்.

அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் கூட்டு சாலை அருகே சென்ற போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது. மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் சகாயராஜ் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலியனார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகாயராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com