நின்ற லாரி மீது மொபட் மோதியதில் முதியவர் சாவு

நின்ற லாரி மீது மொபட் மோதியதில் முதியவர் இறந்தார்.
நின்ற லாரி மீது மொபட் மோதியதில் முதியவர் சாவு
Published on

தா.பேட்டை:

தா.பேட்டையை அடுத்த தேவானூர் கிராமத்தில் உள்ள ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 67). இவர் தா.பேட்டை பகுதியில் பல்பொருள் அங்காடியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு மொபட்டில் சென்ற போது சாலை ஓரம் நின்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியதில், அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயராகவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயராகவன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தா.பேட்டை போலீசார், விஜயராகவன் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மாணிக்கம் (54) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com