சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை
Published on

திட்டக்குடி அருகே எழுத்தூரை சேர்ந்தவர் மணி (வயது 65). இவர் கடந்த 13.2.2021 அன்று தனது வீட்டு முன்பு பேத்தியுடன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை தனியாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கன்னத்தில் அறைந்துள்ளார்.

இருப்பினும் இது பற்றி அந்த சிறுமி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரது தாய் விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர், தனது தீர்ப்பில் இவ்வழக்கில் மணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், மாநில நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை 30 நாட்களுக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com