எரியாத தெருவிளக்குகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

தெருவிளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
எரியாத தெருவிளக்குகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் ஊராட்சி முக்குளம் கிராமத்தில் தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும்,அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாலையில் நடை பயிற்சி செல்வோர் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com