தலைகுப்புற கவிழ்ந்த கார்

கொடைக்கானல் மலைப்பாதையில் கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தலைகுப்புற கவிழ்ந்த கார்
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ராகேஷ் (வயது 28), சிதானந்தம் (35). நண்பர்களான இவர்கள் 2 பேரும், நேற்று காரில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, 2 பேரும் மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பினர். காரை ராகேஷ் ஓட்டினார். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தது.

பண்ணைக்காடு அருகே நண்டாங்கரை பகுதியில் மலைப்பாதை வளைவில் அவர்கள் வந்தபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், காரில் வந்த ராகேஷ், சிதானந்தம் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கார் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com