திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அங்கன்வாடி மையம்

திறப்பு விழாவிற்காக அங்கன்வாடி மையம் காத்து இருக்கிறது.
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அங்கன்வாடி மையம்
Published on

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியம் கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சத்திரப்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தின் கட்டிடம் சேதமடைந்ததால் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டும்பணி நடைபெற்றது. அதுவரை தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிட கட்டுமான பணி முடிவடைந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆகையால் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com