அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி

நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி
Published on

சென்னை,

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களை படிப்பதற்காக வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம். 30 நாள்களில் திருப்பி அளிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலில் நூல்கள் வழங்கப்பட உள்ளன.

11ம் தேதி முதல் புத்தகங்களை உறுப்பினர்கள் எடுத்துச் செல்லலாம். 2 முறை புதுப்பித்தல் (Renewable) செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் நூலத்தில் உள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் வெளியே எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com