

சிங்காநல்லூர், விருகம்பாக்கம், உட்பட 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேறு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள்.