வந்தே பாரத் ரெயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிப்பு


வந்தே பாரத் ரெயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிப்பு
x

நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் வரும் 9 ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே 'வந்தே பாரத்' ரெயில் கடந்த 2024 செப்டம்பர் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.'வந்தே பாரத்' ரெயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது கோவில்பட்டியிலும் 'வந்தே பாரத்' ரெயில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருமார்க்கத்திலும் செல்லும் 'வந்தே பாரத்' ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்வதற்கான உத்தரவு முறைப்படி தெற்கு ரெயில்வே விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் வரும் 9 ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும். காலை 6.05 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 6.38 மணிக்கு கோவில்பட்டி ரெயில்நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து புறப்படும் ரெயில் இரவு 9.23 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தடையும் என்று தெற்கு ரெயில்வே தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story