முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com