போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்

குலசேகரத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்
Published on

குலசேகரம், 

பேச்சிப்பாறை மிராண்டா விளையாட்டு மன்ற ஆண்டுவிழாவையொட்டி நேற்று குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை வரை போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதன் தொடக்க விழா குலசேகரம் பஸ் நிலையத்தில் நடந் தது. மாரத்தான் ஓட்டத்தை குலசேகரம் பேரூராட்சித் தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் தொடங்கி வைத்தார். குலசேகரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன், பேச்சிப்பாறை சப்- இன்ஸ்பெக்டர் வல்சலம், விளையாட்டு மன்ற தலைவர் அபின், ஆலோசகர்கள் ஸ்டாலின், ஜெஸ்டின்ராஜ், ரமேஷ் கண்ணன், பயிற்சியாளர் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சிப்பாறை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சோபித குமார் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இந்த ஓட்டத்தில் ஏராளமான பள்ளிக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com