எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்றே முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

அனைத்து கல்லுரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்தாண்டு ஜூன் 6 தேதியே தொடங்கிவிட்டது. வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பம் தொடங்கும். இருப்பினும், மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான அவகாசம் வழங்கும் பொருட்டு முன்னரே தொடங்கியது.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 25-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்றே முடிவடைய இருந்த நிலையில் தற்போது விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com