

மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் 5 எண்ணெய், எரிவாயு கிணறுகளுக்கு அனுமதிக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அருகே வங்கக் கடலில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவில் எண்ணெய் வயல் அமைந்துள்ள நிலையில் அதே பகுதியில் மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளது.