சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின் தடை
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 05.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

கோயம்பேடு : ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ்வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு, டாக்டர்.அம்பேத்கர் தெரு, டிஎஸ்டி நகர், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் வில்லேஜ், அழகிரி நகர், சின்மையா நகர், லோகநாதன் நகர், இந்திரா காந்தி தெரு, மாங்காளி நகர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com