நிதி நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

நிதி நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டி அடுத்த அமத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 24). நிதி நிறுவன ஊழியர். இந்த நிலையில் பெத்தம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (28) என்பவர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சென்றாயன் வேலை செய்த நிதி நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றார். கடந்த மாதம் சக்திவேல் லோன் தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்றாயன், சக்திவேலுக்கு போன் செய்து லோன் தொகையை செலுத்துமாறு கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் (28) அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து சென்றாயனை தாக்கினர். இதுகுறித்து சென்றாயன் கொடுத்த புகாரின்பேரில் பெத்தம்பட்டி சக்திவேல் (28), அன்பு (27), கோவிந்தராஜ் (25), மாதன் கொட்டாய் மோகன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com