பாப்பிரெட்டிப்பட்டி அருகே75 வயது மூதாட்டி பலாத்காரம்; வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே75 வயது மூதாட்டி பலாத்காரம்; வாலிபர் கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவரை தனது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் மட்டைகளை வெட்ட அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து கார்த்திக் மூதாட்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் திடீரென மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மூதாட்டியின் காதில் அடிபட்டு அவரது தோடு அறுந்து விழுந்தது. இதனை கண்ட கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மூதாட்டி அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை பலாத்காரம் செய்த கார்த்திக்கை கைது செய்து சிறையின் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com