புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
Published on

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது டி.வேலாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரிஹுசைன் தலைமையில் சென்ற போலீசார் அய்யனார் (வயது42) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். இதில் 30 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து அய்யனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com