மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போளாரி கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்ற வெங்கடேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஓசதொட்டி கிராமத்தில் மது விற்ற ரமேஷ் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com