லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
Published on

ஓசூர்:

ஓசூர் அட்கோ போலீசார் பூ மார்க்கெட் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக, ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்த சோமசேகர் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 10 சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல், ஓசூர் டவுன் போலீசார் ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ஓசூர் ஓம் சாந்தி நகரை சேர்ந்த நாகராஜ் (49) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com