பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாமியாபுரம் கூட்ரோடு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம் அப்பகுதியை சேர்ந்த குபேந்திரன் (வயது 40), நாகராஜ் (60), சக்திவேல் (47), ரமேஷ் (47), கார்த்திக் (32), சந்திரசேகர் (42) ஆகியோர் பணம வைத்து சூதாடியது தெரிவந்தது. இதையடுத்து பாப்பிரெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,100-ஐ பறிமுதல் செய்தார்.

இதேபோல் வெங்கடசமுத்திரம் பகுதியில் சூதாடிய பாபு (50), முருகன், விமல், விக்ரம் ஆகியோர் போலீசாரை கண்டவுடன் ஓடி விட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com