சேந்தமங்கலம் அருகே தாய், மகளை மிரட்டிய 2 பேர் கைது

சேந்தமங்கலம் அருகே தாய், மகளை மிரட்டிய 2 பேர் கைது
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி அண்ணா நகரை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய 2-வது மனைவி அமலா. இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சின்ராஜ், அவருடைய அண்ணன் பந்தல்ராஜ் (38), தம்பி பசுபதி (27) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சின்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பந்தல்ராஜ், பசுபதி மற்றும் அவர்களுடைய தாயார் அங்காயி (60) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பசுபதி, அண்ணி அமலா வீட்டுக்கு சென்று கொலை வழக்கு குறித்த புகாரை வாபஸ் பெறுமாறு கூறி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் அவருடைய 8 வயது மகளையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமலா சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 8 வயது சிறுமி மற்றும் தாயாரை மிரட்டியதாக பசுபதி, பந்தல்ராஜ், அங்காயி ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பசுபதி, பந்தல்ராஜ் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான அங்காயியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com