சேலம் மாவட்டத்தில் 21 பள்ளிகளில் கலை போட்டி

மாவட்டத்தில் உள்ள 21 பள்ளிகளில் வட்டார அளவிலான கலை போட்டியில் 39 ஆயிரத்து 920 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டத்தில் 21 பள்ளிகளில் கலை போட்டி
Published on

கலை போட்டி

அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கவின்கலை, இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு பள்ளி அளவிலான கலை போட்டி கடந்த 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது.

மாவட்டத்தில் 662 பள்ளிகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வட்டார அளவிலான கலை போட்டி மாவட்டத்தில் உள்ள 21 பள்ளிகளில் தொடங்கியது.

39,920 மாணவர்கள் பங்கேற்பு

இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 21 ஆயிரத்து 482 பேர், 9 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை 11 ஆயிரத்து 546 பேர், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை 6 ஆயிரத்து 892 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 920 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் கலை போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த போட்டியை மாவட்ட கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இந்த கலை போட்டிகள் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் மாவட்ட அளவிலான கலை போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com