அரசு பள்ளியில் கலை திருவிழா

பெரியாங்குப்பம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.
அரசு பள்ளியில் கலை திருவிழா
Published on

ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், நகர மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com