ஒரு கட்சித் தொண்டனாக.. தோளோடு தோள் நின்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் - அண்ணாமலை

பாஜக-வைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் அண்ணாமலை தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சித் தொண்டனாக.. தோளோடு தோள் நின்று  தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜக-வைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்றத்தன்மை மற்றும் திமுகவின் துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பிரம்மாண்டத்துடனும், ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. தேசம் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழ்நாடு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஒரு கட்சித் தொண்டனாக (Karyakarta), வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தேஜ கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com