தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்பு விழாவில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஐதராபாத் சென்றார்.
தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்பு விழாவில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
Published on

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார்.

இந்தநிலையில் தெலுங் கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com