

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் லட்சுமணன் ஆய்வு செய்தார். அப்போது நுண்கதிர் பிரிரில் புதிதாக அமைந்துள்ள எக்ஸ்ரே கருவியை பார்வையிட்டு, செவிலியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மருத்துவமனையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என தெரிவித்தார். டாக்டர்கள் சதீஷ், வெண்ணிலா, செவிலியர் சந்தோஷ் குமார், உதவி எழுத்தர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.