

திருச்செந்தூர்,
இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்) நடத்தும் புரபேஷனரி ஆபிசர் பதவிக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 12, 13, 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. 4,336 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 30 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
இந்த தேர்வுக்கு www.ibps.in என்ற இணையதளம் வழியாக வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறும். பயிற்சிக்கான கட்டணம் ரூ.4,000 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வெளியில் செல்லவோ, விடுப்பு எடுக்கவோ அனுமதி கிடையாது.
பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3,000-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 5-ந்தேதி அன்று நேரில் செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.4,000-க்கான டிமான்ட் டிராப்ட்(கனரா வங்கி-ஐ.ஓ.பி-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04639-242998 என்ற தொலைபேசி எண்ணிலும், 94420 55243, 86829 85148 என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.