திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை கருடசேவை நிழ்ச்சியை முன்னிட்டு அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு அபிஷேகமும், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com