டாக்டர் மீது தாக்குதல்; 2 வாலிபர்கள் கைது

உத்தனப்பள்ளியில் டாக்டர் மீது தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டளனர்.
டாக்டர் மீது தாக்குதல்; 2 வாலிபர்கள் கைது
Published on

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி பங்களா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). டாக்டர். இவர் உத்தனப்பள்ளியில் கிளினிக் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பீரேபாளையத்தை சேர்ந்த வாலிபர் சந்தோஷ் காயத்துடன் கிளினிக்கிற்கு வந்து சிகிச்சை அளிக்குமாறு டாக்டரிடம் கேட்டுள்ளார். அப்போது நோயாளிகளை பார்த்து கொண்டிருப்பதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு டாக்டர் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர்களை அழைத்து வந்து டாக்டரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து டாக்டர் வெங்கடேசன் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் (21), மது (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சந்தோஷ், நந்தீஷ்குமார், சேகர், ஹரி ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com