வாங்கிய பீடிக்கு காசு கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல்

வாங்கிய பீடிக்கு காசு கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வாங்கிய பீடிக்கு காசு கேட்ட கடைக்காரர் மீது தாக்குதல்
Published on

கிருஷ்ணகிரி ராமதாஸ் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 34). அதேபகுதியில் மளிகை கடை மற்றும் மொபைல் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் பணிபுரிபவர் வெங்கடாசலபதி (34). கடந்த, 1-ந் தேதி பார்த்திபன் கடைக்கு வந்த 4 பேர் பீடி வாங்கி உள்ளனர். அதற்கு பணம் கேட்ட வெங்கடாசலபதியை மிரட்டி அடித்தனர். இதுகுறித்து தட்டிகேட்ட கடை உரிமையாளர் பார்த்திபனையும் சோடா பாட்டிலால் தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கடாசலபதி, பார்த்திபன் 2 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக வெங்கடாசலபதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com